கொரோனா வைரஸ் பரவும் வேகம் அதிகரித்து வருகின்றது! உலக சுகாதார அமைப்பு -
கொரோனா வைரஸ் பரவும் வேகம் அதிகரித்து வருகின்றது என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
அந்த அமைப்பின் தலைவர் டெடிரோஸ் அடெனெம் கெப்ரெயேசஸ் இதனை தெரிவித்துள்ளார். ஜெனீவாவில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர் இதனை கூறியுள்ளார்.
தொடர்ந்தும் பேசிய அவர்,
முதல் நோயாளி குறித்த அறிவிப்பிற்கும் 100,000 நோயாளிகள் குறித்த அறிவிப்பிற்கும் இடையில் 67 நாட்கள் காணப்பட்டன.
எனினும் அடுத்த 11 நாட்களில் மேலும் 100,000 நோயாளிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இறுதியாக நான்கு நாட்களில் 100,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தற்போது சுமார் 300,000 மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகின் அனைத்து நாடுகளிலும் பாதிக்கப்பட்டவர்கள் இனம் காணப்பட்டுள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கொரோனா வைரஸை கட்டுப்படுத்திய சீனாவிற்கு உலக சுகாதார அமைப்பு பாராட்டு தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
அந்த அமைப்பின் தலைவர் டெடிரோஸ் அடெனெம் கெப்ரெயேசஸ் இதனை தெரிவித்துள்ளார். ஜெனீவாவில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர் இதனை கூறியுள்ளார்.
தொடர்ந்தும் பேசிய அவர்,
முதல் நோயாளி குறித்த அறிவிப்பிற்கும் 100,000 நோயாளிகள் குறித்த அறிவிப்பிற்கும் இடையில் 67 நாட்கள் காணப்பட்டன.
எனினும் அடுத்த 11 நாட்களில் மேலும் 100,000 நோயாளிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இறுதியாக நான்கு நாட்களில் 100,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தற்போது சுமார் 300,000 மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகின் அனைத்து நாடுகளிலும் பாதிக்கப்பட்டவர்கள் இனம் காணப்பட்டுள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கொரோனா வைரஸை கட்டுப்படுத்திய சீனாவிற்கு உலக சுகாதார அமைப்பு பாராட்டு தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
கொரோனா வைரஸ் பரவும் வேகம் அதிகரித்து வருகின்றது! உலக சுகாதார அமைப்பு -
Reviewed by Author
on
March 24, 2020
Rating:

No comments:
Post a Comment