கொரோனா வைரஸ் தாக்கத்தால் தமிழ் வைத்தியர் ஒருவர் பலி -
கிங்ஸ்டன் வைத்தியசாலையில் மருத்துவ ஆலோசகராக செயற்பட்ட 74 வயதான வைத்தியர் அன்ரன் செபஸ்டியன் (திலகன்) என்பவரே உயிரிழந்துள்ளார்.
வைத்திய துறையிலிருந்து ஓய்வு பெற்று சமூக சேவையாளராக செயற்பட்ட அவர், பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் தீவிரம் அடைந்துள்ள நிலையில், வைத்தியர்கள் பற்றாக்குறை ஏற்பட்டது.
இதன் காரணமாக தள்ளாத வயதிலும் மீண்டும் சேவையில் ஈடுபட்டு கொரோனா நோயாளர்களை குணப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார்.
தனது வயதினையும் கருத்திற் கொள்ளாது மக்களை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டிருந்த அவர் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக உயிரிழந்துள்ளார்.
இவர் கண்டி பேராதனைப் பல்கலைக்கழகத்தில் மருத்துவப் பட்டப்படிப்பினை (1967) நிறைவு செய்துள்ளார். மேலும் இவர் ஒரு எழுத்தாளர் எனவும் மருத்துவம், வரலாறு சார்ந்த சில புத்தகங்களை எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கொரோனா வைரஸ் தாக்கத்தால் தமிழ் வைத்தியர் ஒருவர் பலி -
Reviewed by Author
on
April 07, 2020
Rating:

No comments:
Post a Comment