கொரோனா தொற்றாளருடன் பஸ்ஸில் யாழ் வந்த 6 பயணிகள் தலைமறைவு; தேடும் பணி பொலிஸாரிடம் ஒப்படைப்பு
அவர்கள் 6 பேரையும் கண்டறியும் பணி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:
“யாழ்ப்பாணத்துக்கு கடந்த 25ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இரவு 10 மணிக்குப் புறப்பட்ட என்.சி.ஜி என்ற பெயர் கொண்ட டபிள்யூ.பி.என்.சி 8760 என்ற இலக்கமுடைய பஸ்ஸில் பயணித்தவர்கள் சமூக அக்கறையுடன் உடனடியாக சுகாதார அதிகாரிகளைத் தொடர்பு கொள்ளுமாறு கோரப்பட்டுள்ளது.
அத்துடன் பஸ் சேவை நிறுவனத்திடமிருந்து பயணித்தவர்களின் தொலைபேசி இலக்கம் பெறப்பட்டு சுயதனிமைப்படுத்தும் நடவடிக்கையில் சுகாதாரத் துறையினர் நேற்று ஈடுபட்டனர். அவ்வாறு 37 பயணிகள் சுயதனிமைப்படுத்தப்பட்டனர்.
அத்துடன், சாரதியும் நடத்துநரும் கொழும்பில் தங்கியுள்ள நிலையில் சுயதனிமைப்படுத்தப்பனர். எனினும் அந்த பஸ்ஸில் பயணித்த 6 பேர் அலைபேசியை நிறுத்தி வைத்துவிட்டு தலைமறைவாகியுள்ளனர். அவர்கள் 6 பேரையும் கண்டறியும் பணி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது” என்றார்.
கொரோனா தொற்றாளருடன் பஸ்ஸில் யாழ் வந்த 6 பயணிகள் தலைமறைவு; தேடும் பணி பொலிஸாரிடம் ஒப்படைப்பு
Reviewed by Author
on
November 01, 2020
Rating:

No comments:
Post a Comment