அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான இணையத்தினால் 100 குடும்பங்களுக்கு நிவாரணப்பொதிகள் வழங்கி வைப்பு

மன்னார் மடு பிரதேச செயலக பிரிவில் இயற்கை அனர்தங்களாலும் தற்போதைய கொரோனா தாக்கத்தின் காரணமாகவும் தமது அன்றாட வாழ்வாதாரத்தை இழந்து பாதிக்கப்பட்டுள்ள மிகவும் வறிய மற்றும் பெண் தலைமை தாங்கும் குடும்பங்கள் மற்றும் போரினால் பாதிக்கப்பட்டு அங்கவீனமாக்கப்பட்டவர்களுக்கான உலர் உணவு நிவாரனப்பொதிகள் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான இணையத்தின் (FORUM ) ஏற்பாட்டில் அதன் இணைப்பாளர் திலீபன் தலைமையில் வழங்கி வைக்கப்படுள்ளது.

  எம் உறவுகளுக்கு கை கொடுப்போம் எனும் நிகழ்ச்சித் திட்டத்தின் ஊடாக மடு பிரதேச செயலகப்பிரிவின் அமைதிபுரம் தட்சனாமருதமடு, கீரி சுட்டான் ஆகிய கிராமங்களில் தெரிவுசெய்யப்பட்ட 100 குடும்பங்களுக்கு மன்னார் மாவட்ட அனர்த முகாமைத்துவ பிரிவின் ஆலோசனைக்கு அமைவாகவும் மடு பிரதேச உதவி செயலாளர் அவர்களின் உறுதிப்படுத்தலுடனும் குறித்த நிவாரணப்பொதி வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

  ஒரு குடும்பத்திற்கு 2500 ரூபா பெறுமதியான அரிசி,மா,பருப்பு,சீனி போன்ற அத்தியாவசிய பொருட்கள் உள்ளடக்கப்பட்ட உலர் உணவு பொதிகள் மேற்படி வழங்கி வைக்கப்பட்டுள்ளது குறித்த நிவாரணப்பணியின்போது பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான இணையத்தின் நிகழ்ச்சி திட்ட இணைப்பாளர் நிரோஜன் மற்றும் நிறுவனத்தின் பணியாளர்கள் கிராமசேவையாளர்களும் இணைந்து நிவாரண பொருட்களை வழங்கி வைத்தனர்.
                 
















மன்னாரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான இணையத்தினால் 100 குடும்பங்களுக்கு நிவாரணப்பொதிகள் வழங்கி வைப்பு Reviewed by Author on December 29, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.