அண்மைய செய்திகள்

recent
-

கனடா பிரதமரின் பொங்கல் வாழ்த்து: "தமிழ் வரலாற்றை அறிய ஊக்குவிப்பேன்"

பொங்கல் திருநாளையொட்டி கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ விடுத்துள்ள பொங்கல் தின வாழ்த்துச் செய்தியில், தமிழ் வரலாறு, அதன் தாங்கும் திறன் மற்றும் வலிமையை அறிய சக கனடியர்களை ஊக்குவிப்பேன் என்று தெரிவித்துள்ளார். கனடா நாட்டில் பெருமளவில் இந்திய சமூகத்தினர் வாழ்கிறார்கள். 

 அதில் குறிப்பிடத்தக்கவர்கள் சீக்கியர்கள் மற்றும் தமிழ் சமூகத்தினர். அங்கு வாழும் தமிழ் சமூகத்தினர் இந்தியா மட்டுமின்றி இலங்கை வம்சாவளி தமிழர்களாகவும் உள்ளனர். அந்த நாட்டில் பன்முக கலாசாரத்தை போற்றும் வகையில் அவற்றின் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை வழக்கமாகக் கொண்டிருப்பவர் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ.

 வழக்கமாக அந்தந்த கலாசார நிகழ்வுகளின்போது அந்த சமூகத்தினரின் பாரம்பரிய ஆடையில் தோன்றி நிகழ்ச்சியை கொண்டாடுவதை அவர் வழக்கமாக கொண்டிருக்கிறார்.கடந்த ஆண்டும் இந்த ஆண்டும் கொரோனா பரவல் கட்டுப்பாடுகள் காரணமாக, பொது நிகழ்ச்சிகளை தவிர்த்த ஜஸ்டின் ட்ரூடோ இந்த ஆண்டு பொங்கல் தின வாழ்த்துகளை வெளியிட்டிருக்கிறார்.



கனடா பிரதமரின் பொங்கல் வாழ்த்து: "தமிழ் வரலாற்றை அறிய ஊக்குவிப்பேன்" Reviewed by Author on January 15, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.