அண்மைய செய்திகள்

recent
-

அவுஸ்திரேலியாவில் பேருந்து சாரதிகளாக பணியாற்றும் இலங்கையின் இரு முன்னாள் கிரிக்கெட் வீரர்கள்

இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் இருவர் அவுஸ்திரேலியாவில் பேருந்து சாரதிகளாக தொழில்புரிவதை குறித்த செய்தியை ஆங்கில இணையத்தளமொன்று வெளியிட்டுள்ளது. சுராஜ் ரன்தீவும் சிந்தகஜெயசிங்கவும் மெல்பேர்னில் உள்ள பிரான்சை தளமாக கொண்ட டிரான்ஸ்டெவ் என்ற நிறுவனத்தில் பேருந்து சாரதிகளாக பணிபுரிகின்றனர். 

 இவர்கள் பேருந்து சாரதிகளாக பணியாற்றுவதுடன் உள்ளுர் கழகமொன்றிற்காக கிரிக்கெட் விளையாடிவருகின்றனர். 1200க்கும் மேற்பட்டவர்கள் சாரதிகளாக பணியாற்றும் டிரானஸ்டெவ் என்ற நிறுவனமே இவர்களை சாரதிகளாக சேர்த்துக்கொண்டுள்ளது. சுராஜ்ரன்தீவ் தனது சாரதி தொழிலுக்கு அப்பால் உள்ளுர் கழகமொன்றின் கிரிக்கெட் நடவடிக்கைகளில் தீவிர ஆர்வம் காட்டிவருகின்றார்,மெல்பேர்னில் சமீபத்தில் அவுஸ்திரேலிய அணி இந்திய அணியை எதிர்கொண்டவேளை இந்திய அணியை எதிர்கொள்வதற்கான பயிற்சிகளை ரன்தீவ் வழங்கியிருந்தார். 

 அவுஸ்திரேலிய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை என்னை வலைபயிற்சிகளிற்கு உதவுமாறு கேட்டுக்கொண்டது நான் சிறிய சந்தர்ப்பத்தை கூட தவறவிட விரும்பவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.


அவுஸ்திரேலியாவில் பேருந்து சாரதிகளாக பணியாற்றும் இலங்கையின் இரு முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் Reviewed by Author on February 28, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.