அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் சோதனை சாவடிகளில் விற்பனைக்கு கொண்டு வரும் பொருட்களை இராணுவத்தினர் பறிப்பதாக விற்பனை முகவர்கள் குற்றசாட்டு

மன்னார் மாவட்டத்தில் உள்ள சில சோதனை சாவடிகளில் சோதனை என்கின்ற பெயரில் விற்பனை பொருட்களை ஏற்றி வருகின்ற வாகனங்களை இடைமறித்து சோதனை இடுவது மாத்திரம் இன்றி தங்களுக்கு தேவையான பொருட்களை வாகனத்தில் இருந்து இராணுவத்தினர் எடுத்து கொள்வதாகவும் வெளி மாவட்டங்களில் இருந்து விற்பனைக்காக வருபவர்களும் விற்பனைக்காக செல்பவர்களும் குற்றம் சுமத்தியுள்ளனர்

 தொடர்சியாக மன்னார் பிரதான பாலப்பகுதியிலும் வங்காளை ,குஞ்சுக்குளம் பகுதியிலும் உள்ள சில சோதனை சாவடிகளில் மேற்படி நிகழ்வுகள் நடைப்பதாகவும் விற்பனைக்காக வரும் போதும் விற்பனை முடிந்து செல்லும் போதும் இவ்வாறான செயற்பாடுகளில் இராணுவத்தினர் ஈடுபடுவதாகவும் தங்களால் எதுவும் செய்ய முடியாத நிலையில் இராணுவத்தினர் எடுக்கும் பொருட்களை விருப்பமின்றி அவர்களிடமே கொடுத்து விட்டு வருவதாகவும் தங்களின் வியாபார இலாபம் அதிக அளவில் இவ்வாறான செயற்பாடுகளால் குறைவடைவதாகவும் விற்பனையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்

 குறித்த பிரச்சினை தொடர்பாக யாரை சந்திப்பது எவ்வாறு இந்த செயற்பாட்டை தடுப்பது என்று கூட தங்களுக்கு தெரியவில்லை எனவும் எனவே மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவர் மாவட்ட அரசாங்க அதிபர் பாராளுமன்ற உறுப்பினர்கள் குறித்த விடையத்தில் தலையிட்டு உரிய நடவடிக்கை மேற்கொண்டு தருமாறு பாதிக்கப்பட்ட சிறு தொழில் விற்பனை முகவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



மன்னாரில் சோதனை சாவடிகளில் விற்பனைக்கு கொண்டு வரும் பொருட்களை இராணுவத்தினர் பறிப்பதாக விற்பனை முகவர்கள் குற்றசாட்டு Reviewed by Author on February 28, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.