அண்மைய செய்திகள்

recent
-

சிவனொளிபாதமலை வந்த மாணவன் மாவெலி ஆற்றில் மாயம்

மாவெலி ஆற்றில் குளிக்கசென்று நீரில் மூழ்கிய பாடசாலை மாணவனை தேடும் பணியில் நாவலப்பிட்டி பொலிஸாரும் பொதுக்களும் ஈடுபட்டுள்ளனர். சினொளிபாதமலைக்கு சென்று திரும்பி செல்லும் வழியில் நீராடச்சென்ற தெல்தெனிய பகுதியை சேர்ந்த இவ்வாருடம் சாதரண தரப்பரிட்சைக்கு தோற்றிய நமந்த ஹிந்துநில் என்ற 16 வயதுடைய மாணவனே இன்று (14) நீரில் மூழ்கியதாக நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர். நேற்று (13) வீட்டார் மற்றும் நண்பர்களுடன் சிவனொளிபாதமலைக்கு சென்று மீண்டும் வீட்டிற்கு செல்கையில் நாவலப்பிட்டி பல்ஹந்த பகுதியில் மாவெலி ஆற்றில் குளித்துவிட்டு உணவு உண்பதற்காக சென்றுள்ளனர். இதன் போது ஆற்றில் இறங்கி குளித்த சிறுவன் திடீரென நீரில் மூழ்கியுள்ளதாக தெரியவருகிறது.

 குறித்த ஆற்றுப்பகுதி பிரதேசம் பாதுகாப்பற்ற நீராடுவதற்கு தடை செய்யப்பட்டுள்ள சுழி பகுதியென்றும் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். நீரில் மூழ்கிய சிறுவனை தேடும் பணியில் நாவலப்பிட்டி பொலிஸாரும் பிரதேசவாசிகளும் ஈடுபட்டு வருவதாக நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சிவனொளிபாதமலை வந்த மாணவன் மாவெலி ஆற்றில் மாயம் Reviewed by Author on March 14, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.