அண்மைய செய்திகள்

recent
-

மாணிக்கக்கல் சுரங்கத்தில் சிக்கி இருவர் பலி!

அவிசாவளை பொலிஸ் பிரிவின் வெரலுபிடிய பிரதேசத்தில் மாணிக்கக்கல் சுரங்கத்தில் சிக்கி இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார். நேற்று இரவு 7.00 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நிலவிய கடும் மழை காரணமாக சுரங்கத்தினுள் மின் தடை ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து சுரங்கத்திற்கு சென்றிருந்த இருவர் அனர்த்தத்திற்கு முகங்கொடுத்திருந்தனர்.

 சுரங்கத்தினுள் சிக்கி உயிரிழந்த இருவரின் சடலங்கள் தற்போதைய நிலையில் அவிசாவளை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார். 44 மற்றும் 45 வயதுடைய இருவரே உயிரிழந்துள்ள நிலையில், சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

மாணிக்கக்கல் சுரங்கத்தில் சிக்கி இருவர் பலி! Reviewed by Author on March 28, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.