அண்மைய செய்திகள்

recent
-

தேங்காய் எண்ணெய் ஏற்றிச் சென்ற கொள்கலன் வேனுடன் மோதி விபத்து!

தேங்காய் எண்ணெய் பீப்பாய்களுடன் சென்ற கொள்கலன் லொறியொன்றும் வேன் வாகனமொன்றும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. கட்டுபொத, வாரியபொல வீதியின் கல்வெவ பிரதேசத்தில் நேற்று (10) இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. கொள்கலன் லொறி வேகக்கட்டுப்பாட்டை இழந்து எதிரில் வந்த வேனில் மோதுண்டதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக அததெரண செய்தியாளர் தெரிவித்தார்.

 மேலும், விபத்து இடம்பெறும் போது கொள்கலன் லொறியின் சாரதி மதுபோதையில் இருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த விபத்தில் காயமடைந்த கொள்கலன் சாரதி உட்பட ஒன்பது பேர் கட்டுபொத வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து தொடர்பில் கொள்கலன் லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ள நிலையில் சம்பவம் தொடர்பில் கட்டுபொத பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்

.
தேங்காய் எண்ணெய் ஏற்றிச் சென்ற கொள்கலன் வேனுடன் மோதி விபத்து! Reviewed by Author on April 11, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.