அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரின் வீதி அபிவிருத்தி பணிகளில் அகற்றப்படும் மணல் தனியார் காணிகளில் பறிக்கப்படுவதாக மக்கள் குற்றச்சாட்டு

மன்னார் தலைமன்னார் பிரதான வீதி அமைக்கும் பணி அண்மைக் காலமாக தனியார் நிறுவனம் ஒன்றுக்கு ஒப்பந்த ரீதியில் வழங்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது குறித்த நிறுவனம் அமைக்கும் வீதிகளின் தரம் தொடர்பாக பல்வேறு முறைப்பாடுகள் குற்றச்சாட்டுக்கள் மக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்ற நிலையில் வீதி அபிவிருத்தி பணிகளின் போது அப்புறப்படுத்தும் மண்ணை பொது தேவைக்கு என பயன்படுத்தாது குறித்த ஒப்பந்த நிறுவனத்தில் பணி புரியும் தனியார் ஒருவரின் காணியில் களஞ்சியப்படுத்துவதாக எழுத்தூர் பகுதியை சேர்ந்த மக்கள் மற்றும் அமைப்புக்கள் இணைந்து மாவட்ட செயலகம் பிரதேச செயலகம் மற்றும் நகர சபையின் கவனத்திற்கு கொண்டுவந்ததுடன் குறித்த பகுதியில் இருந்து அப்புறப்படுத்தும் மணலை எழுத்தூர் பகுதியில் திருத்தப்படாத நிலையில் உள்ள வீதிகளை நிறப்பியும் குன்று குழிகளாய் உள்ள வீதிகளை அமைத்து தருமாறு கோரிக்கை விடுத்திருந்தனர் 

 இந்த நிலையில் குறித்த விடயம் தொடர்பாக நகர சபை கவனம் செலுத்தி குறித்த மணலை அமைக்கப்படாத வீதிகளை அமைக்க முயற்சித்த நிலையில் குறித்த தனியார் காணி உரிமையாளரால் தொடர்சியாக ஏற்பட்ட அழுத்தம் மற்றும் முரண்பாடு காரணமாக குறித்த வீதி அமைக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது 

 எனவே பொது அபிவிருத்தி பணியில் அகற்றப்பட்ட மணல் மக்களின் பொது தேவைக்கு பயன்படுத்தப்பட வேண்டும் எனவும் அமைக்கப்படாத வீதிகளை அமைப்பதற்கு அகற்றப்பட மணலை பயன்படுத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர் எனவே உடனடியாக சம்மந்தப்பட ஒப்பந்த நிறுவனம் மற்றும் சம்மந்தபட்ட அரச அதிகாரிகள் தலையீடு செய்த்து குறித்த பிரச்சினைக்கு தீர்வு பெற்றுத்தறுமாறு எழுத்தூர் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
















மன்னாரின் வீதி அபிவிருத்தி பணிகளில் அகற்றப்படும் மணல் தனியார் காணிகளில் பறிக்கப்படுவதாக மக்கள் குற்றச்சாட்டு Reviewed by Author on April 11, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.