ரூ.5000 கொடுப்பனவு கிடைப்பதில் எழுந்துள்ள சிக்கல்!
12 ஆம் திகதிதான் குறித்த ஆவணங்களை தயாரிக்க வேண்டும்."
இது குறித்து சமுர்தி அபிவிருத்தி திணைக்கள பணிப்பாளர் நாயகம் பந்துல திலகசிறியிடம் அத தெரண வினவியது.
" எங்களுக்கு கிடைத்த ஆலோசனையை விரைவில் செயல்படுத்துவதையே நாங்கள் தற்போது செய்துக் கொண்டுள்ளோம். நீண்ட காலமாக எங்கள் அதிகாரிகளுக்கு ஏற்பட்ட பல பிரச்சினைகளை நாங்கள் தீர்த்து வைத்துள்ளோம். எனவே, இந்த நடவடிக்கைகள் மிகவும் சீராக ஒழுங்கமைக்கப்பட்டுள்ளன.
"
இதற்கிடையில், புதுவருடத்திற்கு இன்னும் இரண்டு நாட்களே இருக்கும் நிலையில் இந்த கொடுப்பனவை வழங்குவது சாத்தியமில்லாததால் குறித்த கொடுப்பனவு வழங்களில் ஈடுபட மாட்டோம் என இலங்கை கிராம உத்தியோகத்தர்கள் சங்கம் மற்றும் அனைத்து இலங்கை அரசாங்க மேம்பாட்டு அலுவலர்களின் கூட்டு தொழிற்சங்கம் ஆகியவை இன்று அறிவித்துள்ளன.
கொவிட் -19 பேரனர்த்த சூழ்நிலையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு பண்டிகை காலத்திற்கு ரூ .5 ஆயிரம் கொடுப்பனவு வழங்குவதற்கான தீர்மானம் தொடர்பான சுற்றறிக்கையும் நேற்று (10) வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
ரூ.5000 கொடுப்பனவு கிடைப்பதில் எழுந்துள்ள சிக்கல்!
Reviewed by Author
on
April 11, 2021
Rating:

No comments:
Post a Comment