இலங்கை விமானப்படை வீரரான ரொஸான் அபேசுந்தர தலைமன்னாரில் இருந்து பாக்கு நீரினையை கடந்து புதிய சாதனை.
அவர் நீந்திச் சென்ற மொத்த தூரம் 59.3 கிலோ மீற்றர் என தெரிவிக்கப்படுகிறது.
இதற்காக அவருக்கு 28 மணித்தியாலங்களும் 19 நிமிடங்களும் 43 வினாடிகளும் எடுத்துள்ளது.
இலங்கை விமானப் படையைச் சேர்ந்த நீச்சல் வீரர் ரோஸான் அபேசுந்தர பாக்கு நீரிணையை கடப்பதற்கான பயணத்தை நேற்று (10) சனிக்கிழமை அதிகாலை 2 மணியளவில் தலைமன்னாரில் இருந்து ஆரம்பித்துள்ளார்.
தலைமன்னார் இறங்கு துறையில் இருந்து பாக்கு நீரிணையை நோக்கி தனது பயணத்தை ஆரம்பித்துள்ளார்.
-குறித்த விமானப்படை வீரர் நேற்று சனிக்கிழமை அதிகாலை 2 மணியளவில் தனது நீச்சல் பயணத்தை ஆரம்பித்துள்ள நிலையில் பாக்கு நீரினை ஊடாக தனுஸ் கோடியை சென்றடைந்தார்.
-பின்னர் அங்கிருந்து மீண்டும் இன்று ஞாயிற்றுக்கிழமை (11) அதிகாலை 3 மணியளவில் தலைமன்னாரை வந்தடைந்தார்.
இதற்கு முன்னர் இந்தியாவை சேர்ந்த ஆனந்த குமார் என்ற நபர் இந்த சாதனையை படைந்திருந்த நிலையில் அவருக்கு குறித்த தூரத்தை கடக்க 51 மணித்தியாலங்கள் எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை விமானப்படை வீரரான ரொஸான் அபேசுந்தர தலைமன்னாரில் இருந்து பாக்கு நீரினையை கடந்து புதிய சாதனை.
Reviewed by Author
on
April 11, 2021
Rating:

No comments:
Post a Comment