அண்மைய செய்திகள்

recent
-

திருகோணமலையில் நீரோடையில் விழுந்து 2 வயது சிறுமி பலி!

திருகோணமலை, தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சிராஜ் நகர் பகுதியில் வீட்டுக்கு முன்னால் உள்ள நீரோடையில் விழுந்து இரண்டு வயது சிறுமி பலியான சம்பவம், இன்று (24) இடம்பெற்றுள்ளது. சிராஜ் நகர், மயில் தீவு பகுதியைச் சேர்ந்த ஏ.அகிலா எனும் சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

 சிறுமியைக் காணவில்லை என சுமார் அரை மணி நேரம் தாய் தேடிய நிலையில், வீட்டுக்கு முன்னால் உள்ள நீரோடையில் சிறுமி சடலமாக மீட்கப்பட்டதாக ஆரம்ப கட்ட விசாரணை மூலம் தெரியவந்துள்ளது. வீட்டிலிருந்து சுமார் 400 மீற்றர் தூரத்தில் இவ்வாறு சடலம் மீட்கப்பட்டுள்ளது. சடலம், தம்பலகாமம் பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தம்பலகாமம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

திருகோணமலையில் நீரோடையில் விழுந்து 2 வயது சிறுமி பலி! Reviewed by Author on May 24, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.