திருகோணமலையில் நீரோடையில் விழுந்து 2 வயது சிறுமி பலி!
சிறுமியைக் காணவில்லை என சுமார் அரை மணி நேரம் தாய் தேடிய நிலையில், வீட்டுக்கு முன்னால் உள்ள நீரோடையில் சிறுமி சடலமாக மீட்கப்பட்டதாக ஆரம்ப கட்ட விசாரணை மூலம் தெரியவந்துள்ளது.
வீட்டிலிருந்து சுமார் 400 மீற்றர் தூரத்தில் இவ்வாறு சடலம் மீட்கப்பட்டுள்ளது. சடலம், தம்பலகாமம் பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தம்பலகாமம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
திருகோணமலையில் நீரோடையில் விழுந்து 2 வயது சிறுமி பலி!
Reviewed by Author
on
May 24, 2021
Rating:

No comments:
Post a Comment