அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் கொரோனா நாட்டை விட்டு நீங்க வேண்டி விசேட பிரித்தோதல் வழிபாடு

இலங்கை முழுவதும் அதிகரித்து வரும் கொரோனா பரவல் முற்றிலுமாக நீங்க வேண்டி மன்னார் மாதோட்ட ராஜ மஹா விகாரையில் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு விசேட வழிபாடு இடம் பெற்றது.

 திருகேதீஸ்வரம் பகுதியில் உள்ள மாதோட்ட ராஜ மஹா விகாரையின் பீடாதிபதி சங்கரக்கித தேரர் தலைமையில் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை 6 மணி தொடக்கம் குறித்த நிகழ்வு இடம் பெற்றதுடன் நிகழ்வு இடம் பெற்றதுடன் தொடர்சியாக 7 நாட்கள் பிரித் ஓதி வழிபாடுகள் இடம் பெறவுள்ளது

 குறித்த வழிபாட்டு நிகழ்வில் தள்ளாடி 54 படைபிரிவு மேஜர் ஜெனரல் இந்திரஜித் பண்டார , மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.ஸரான்லி டிமேல் ,மன்னார் பிரதேச செயளாலர் ம.பிரதீப் உட்பட பலரும் கலந்து கொண்டு வழிபாடுகளை மேற்கொண்டமை குறிப்பிடதக்கது
                 












மன்னாரில் கொரோனா நாட்டை விட்டு நீங்க வேண்டி விசேட பிரித்தோதல் வழிபாடு Reviewed by Author on June 23, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.