அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் இளைஞர் பாரளுமன்ற உறுப்பினரால் 100 குடும்பங்களுக்கு உலர் உணவு பொதிகள் வழங்கி வைப்பு.

மன்னார் மாவட்டத்தில் முதல் கட்டமாக தெரிவு செய்யப்பட்ட 100 குடும்பங்களுக்கான உலர் உணவுப் பொதிகள் மன்னார் பிரதேச இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் நிரோச் மற்றும் அவரது சகோதரனின் நிதி பங்களிப்பில் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. 

கொரோனா தொற்று காரணமாக அமுல் படுத்தப்பட்ட பயணத்தடை காரணமாக பாதீக்கப்பட்ட குடும்பங்கள் தெரிவு செய்யப்பட்டு குறிப்பாக பெண் தலைமைத்துவ குடும்பங்கள்,மாற்றுத்திறனாளிகளைக் கொண்ட குடும்பங்கள்,மற்றும் பாதீக்கப்பட்ட குடும்பங்கள் என 100 குடும்பங்கள் இவ்வாறு தெரிவு செய்யப்பட்டு குறித்த உலர் உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

 -சாந்திபுரம்,சாவற்கட்டு,செளத்பார்,பெற்றா,கீரி ஆகிய கிராமங்களில் இருந்து தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கே குறித்த உலர் உணவுப் பொதிகள் கையளிக்கப்பட்டது. அரிசி,மா,சீனி,பருப்பு,நெத்தலி,பால்மா உட்பட 2000 ரூபா பெறுமதியான அத்தியாவசிய பொருட்கள் மேற்படி வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடதக்கது












மன்னாரில் இளைஞர் பாரளுமன்ற உறுப்பினரால் 100 குடும்பங்களுக்கு உலர் உணவு பொதிகள் வழங்கி வைப்பு. Reviewed by Author on June 23, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.