பயணக் கட்டுப்பாடுகளை நீடிப்பது தொடர்பாக இதுவரையில் எவ்வித தீர்மானமும் இல்லை
மேலும், எதிர்வரும் 7 ஆம் திகதி வரை நிலவும் நிலைமையைக் கருத்திற் கொண்டு, அந்த நிலைமையின் அடிப்படையில் மிகவும் பொருத்தமான தீர்மானம் எடுக்கப்படும்.
அத்துடன், கடந்த ஒரு வாரத்திற்குமேல் பயணக் கட்டுப்பாடுகளை விதித்ததன் வெற்றி அல்லது தோல்வியை ஜூன் 1 ஆம் திகதிக்குப் பின்னர்தான் அறிய முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை, சீனாவில் தயாரிக்கப்பட்ட சினோபார்ம் கொவிட் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் எதிர்வரும் ஜூன் மாதம் 8 ஆம் திகதி முதல் வழங்கப்படவுள்ளன.
இதன்படி, முதல் டோஸை எடுத்தவர்கள், தமது அட்டையில் குறிப்பிடப்பட்டுள்ள குறித்த திகதியில் மற்றும் முதலாவது டோஸ் பெறப்பட்ட இடத்திலேயே இரண்டாவது டோசையும் பெற்றுக்கொள்ள முடியும் என்பதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா மேலும் தெரிவித்தார்.
பயணக் கட்டுப்பாடுகளை நீடிப்பது தொடர்பாக இதுவரையில் எவ்வித தீர்மானமும் இல்லை
Reviewed by Author
on
June 01, 2021
Rating:
Reviewed by Author
on
June 01, 2021
Rating:


No comments:
Post a Comment