தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு மேலும் ஒருவாரத்திற்கு நீடிப்பு
இன்று (வெள்ளிக்கிழமை) காலை ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதியின் தலைமையில் நடைபெற்ற கொரோனா தடுப்பு செயலணியின் விசேட கலந்துரையாடலின்போதே குறித்த முடிவு எட்டப்பட்டுள்ளது.
அதன்படி எதிர்வரும் 30 ஆம் திகதி வரை அமுல்படுத்துவதாக அறிவிக்கப்பட்டிருந்த தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு தற்போது மேலும் ஒரு வாரத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளது.
எதிர்காலத்தில் நீண்ட காலத்திற்கு நாடு முடக்கப்பட்டால், நாட்டில் உள்ள அனைவரும் அதிக தியாகங்களை செய்ய தயாராக இருக்க வேண்டும் என நாட்டு மக்களுக்கான உரையில் ஜனாதிபதி தெரிவித்திருந்தமையும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.
தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு மேலும் ஒருவாரத்திற்கு நீடிப்பு
Reviewed by Author
on
August 27, 2021
Rating:

No comments:
Post a Comment