அண்மைய செய்திகள்

recent
-

பசியில்லா மன்னார் அமைப்பினால் தென்னை மரக்கன்றுகள் வழங்கி வைப்பு

பசியில்லா மன்னார் அமைப்பின் காடின்றி அமையாது நீர் நிகழ்ச்சித்திட்டத்தில் மன்னார் பிரதேச செயலகப்பிரிவு பேசாலை பகுதியில் வாழும் மக்களுக்கு ஒரு தொகுதி தென்னை மரகன்றுகள் நேற்று பிற்பகல் 5.00 மணியளவில் வழங்கிவைக்கப்பட்டது. 

குறித்த நிகழ்வு பேசாலை நான்காம் வட்டாரத்திலுள்ள கிராம சேவையாளர் அலுவலகத்தில் அந்நிறுவனத்தின் அமைப்பாளர் சவுந்தர ராஜன் சதீஸ் குமார் தலைமயில் விழுதுகள் மன்னார் மாவட்ட அமைப்பாளர் டலிமா அவர்களின் ஏற்பாட்டில் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. குறித்த நிகழ்ச்சி திட்டத்தினூடாக வழங்கி வைக்கப்பட்ட மரக்கன்றுகளை பேசாலை பகுதி மக்கள் பெற்று பயனடைந்துள்ளனர்.








பசியில்லா மன்னார் அமைப்பினால் தென்னை மரக்கன்றுகள் வழங்கி வைப்பு Reviewed by Author on October 24, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.