அண்மைய செய்திகள்

recent
-

வெள்ள நீரால் நுவரெலியா விவசாயிகளின் பயிர்ச்செய்கைகளுக்கு பாதிப்பு

நேற்று பெய்த கன மழையால் நுவரெலியாவிலுள்ள விவசாய நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளன.இதனால் நுவரெலியா விவசாயிகள் நிர்க்கதியான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். நாட்டில் ஏற்பட்டுள்ள இரசாயன உரத்தட்டுப்பாடு, கிருமிநாசினி தட்டுப்பாடு காரணமாக அதிக பிரதேசங் களிலுள்ள விவசாயிகள் விவசாயத்தைக் கை விட்டனர்.

எனினும் நுவரெலியாவில் விவசாயத்தை மட்டுமே நம்பி வாழ்க்கை நடத்துபவர்கள் அதிகம். இதன் காரணமாக உரம்,கிருமிநாசினிகளை அதிக விலைக்கு வாங்கி விவசாயத்தைக் கை விடாமல் பாதுகாத்து வந்து நுவரெலியா , பொரலாந்த , கந்தப்பளை போன்ற பகுதி மக்களின் பயிர்ச்செய்கைகள் நேற்று மாலையில் பெய்த பலத்த மழையால் அழிவடைந்துள்ளதாக பிரதேச விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். மரம் ஏறி விழுந்தவனை மாடு ஏறி மிதித்த கதையாகவே இந்த நுவரெலியா நகர விவசாயிகளின் நிலைமை தற்போது உள்ளது.



வெள்ள நீரால் நுவரெலியா விவசாயிகளின் பயிர்ச்செய்கைகளுக்கு பாதிப்பு Reviewed by Author on October 30, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.