அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் சடுதியாக மரக்கறி வகைகளின் விலை அதிகரிப்பு

நாடளாவிய ரீதியில் மரக்கறிகளின் விலை சடுதியாக அதிகரித்துள்ள நிலையில் மரக்கறிகளை கொள்வனவு செய்யும் மக்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதுடன் மரக்கறி விற்பனையாளர்களும் வியாபாரம் இன்றி பாதிக்கப்பட்டுள்ளனர் நாட்டில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடி அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றத்தால் ஏற்கனவே மக்கள் பொருளாதார சுமையில் சிக்கித்தவித்து வருகின்ற நிலையில் சீரற்ற காலநிலை காரணமாக மரக்கறிகளின் விலைகளும் சடுதியாக உயர்ந்துள்ளது 

 அந்த வகையில் இன்று புதன்கிழமை(17) கரட் 320-340 ரூபாயாகவும்,லீக்ஸ் 320-340 ரூபாயாகவும் ,கத்தரிக்க 320-350 ரூபாயாகவும்,கறிமிளகாய் 450-480 ரூபாயாகவும்,வெங்காயம் 200-240 ரூபாயாகவும்,தக்களி 500-520 ரூபாயாகவும்,போஞ்சி 450 ரூபாயாகவும் பிரதான வியாபார நிலையங்களில் விறபனை செய்யப்பட்டு வருகின்றது மரக்கறிகளின் விலை சடுதியாக அதிகரித்த நிலையில் மரக்கறிகளை கொள்வனவு செய்யும் மக்களின் எண்ணிக்கையும் குறைவடதுள்ளது மரக்கறிகளின் விலையேற்றம் காரணமாக விற்பனையாளர்களும் பொதுமக்களும் தொடர்சியாக பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது
                 







மன்னாரில் சடுதியாக மரக்கறி வகைகளின் விலை அதிகரிப்பு Reviewed by Author on November 17, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.