ஜனாதிபதியை முகநூலில் விமர்சித்த ரூபவாஹினியின் பெண் ஊடகவியலாளர் அவரது நிகழ்ச்சிகளில் இருந்து நீக்கப்பட்டார்- சுதந்திர ஊடக இயக்கம் கடும் கண்டனம்
தனது சேவைகள் இனிமேலும் தேவையில்லை என தனது நிகழ்ச்சியின் தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர் என பெண் ஊடகவியலாளர் தங்களிடம் தெரிவித்துள்ளார் என சுதந்திர ஊடக இயக்கம் தெரிவித்துள்ளது.
உயர்மட்டத்திலிருந்து வந்த உத்தரவின் பேரிலேயே தாங்கள் இதனை தெரிவிப்பதாக நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் ஊடகவியலாளரிடம் தெரிவித்துள்ளனர், என சுதந்திர ஊடக இயக்கம் தெரிவித்துள்ளது.
எனது சமூக ஊடக பதிவுகள் ஜனாதிபதியையும் அரசாங்கத்தையும் விமர்சித்துள்ளதால் ஜனாதிபதி செயலகம் என்னை ரூபவாஹினியின் ஒரு பகுதியாக செயற்பட அனுமதிக்க வேண்டாம் என தெரிவித்துள்ளது, என பெண் ஊடகவியலாளர் தெரிவித்தார் என சுதந்திர ஊடக இயக்கம் தெரிவித்துள்ளது.
இந்த சம்பவத்தை கடுமையாக கண்டித்துள்ள சுதந்திர ஊடக இயக்கம் அரசமைப்பு ரீதியில் ஒருவருக்கு உத்தரவாதம் செய்யப்பட்டுள்ள கருத்து பேச்சு சுதந்திரத்தை மீறுகின்றது என தெரிவித்துள்ளது.
பெண் ஊடகவியலாளர் தனது சமூக ஊடக பதிவிலேயே இந்த விமர்சனத்தை முன்வைத்திருந்தார்,ஒரு தரப்பு இதனை கண்காணித்து அரசாங்கத்தை எச்சரிக்கின்றது என்றால் அது பாரதூரமான விடயம்,பத்திரிகையாளர்கள் கண்காணிக்கப்படுகின்றார்கள் என்பதை அது வெளிப்படுத்துகின்றது என சுதந்திர ஊடக இயக்கம் தெரிவித்துள்ளது.
ஒரு பிரஜை என்ற அடிப்படையில் பேசு;சு கருத்து சுதந்திரம் சவாலுக்கு உட்படுத்தப்படுகின்ற தருணம் இது என சுதந்திர ஊடக இயக்கம் தெரிவித்துள்ளது.
ஜனாதிபதியை முகநூலில் விமர்சித்த ரூபவாஹினியின் பெண் ஊடகவியலாளர் அவரது நிகழ்ச்சிகளில் இருந்து நீக்கப்பட்டார்- சுதந்திர ஊடக இயக்கம் கடும் கண்டனம்
Reviewed by Author
on
March 18, 2022
Rating:
No comments:
Post a Comment