அண்மைய செய்திகள்

recent
-

கூலிக்கு ஆள்வைத்து தனது தந்தையை வெட்டிக் கொலை செய்த மகன்;மட்டக்களப்பு கரடியனாறு பகுதியில் சம்பவம்

மட்டக்களப்பு கரடியனாற்று பிரதேசத்தில் தனது தந்தையை கூலிக்கு ஆள் வைத்து கொலை செய்த 22 வயதுடைய மகன் உட்பட இருவரை நேற்று வியாழக்கிழமை (17) கைது செய்துள்ளதாக மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி பி.எஸ்.பி. பண்டார தெரிவித்தார். கடந்த திங்கட்கிழமை 14 ஆம் திகதி கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள ஈரலக்குளம் குடாவெட்டி வயல் பகுதியில் வேளாண்மை காவலுக்காக அமைக்கப்பட்ட கொட்டகை ஒன்றிலிருந்து வெட்டுகாயங்களுடன் விவசாயியான 54 வயதுடைய 4 பிள்ளைகளின் தந்தையான பரசுராமன் ஆறுமுகம் என்பவர் சடலமாக மீட்கப்பட்டார். 

இந்த நிலையில் இவரின் 22 வயதுடைய மகன் மதுபாவனைக்கு அடிமையாகியுள்ளதனால் மதுபானம் வாங்க தந்தையிடம் பணம் கேட்பது மற்றும் தனது மாட்டுப்பட்டியிலுள்ள மாடுகளை திருடி விற்பது போன்ற செயற்பாடுகளில் ஈடுபட்டு வந்ததால் இவருக்கும் தந்தைக்கும் இடையில் அடிக்கடி வாக்குவாதம் இடம்பெற்றுள்ளது. இதனையடுத்து சிந்துஜன் கிரான் பகுதியைச் சேர்ந்த தனது நண்பனான இட்ணராஜா நிரோசன் என்பவரை கடந்த முதலம் திகதி (1-3-2022) சந்தித்து தனது தந்தையைக் கொலை செய்ய 50 ஆயிரம் ரூபா பணம் தருவதாக அவனிடம் பேரம் பேசியுள்ளான். 

இதனைத் தொடர்ந்து அவனிடம் தொலைபேசியில் பலமுறை தொடர்பு கொண்டு தந்தை கொலை தொடர்பாக வினவி வந்துள்ளான். இதன் பின்னர் கொலை செய்வதற்கான திட்டத்தை தீட்டியுள்ளார். கடந்த 12ஆம் திகதி (12-3-2022) இரவு 9 மணியளவில் படுகொலை செய்யப்பட்ட பரசுராமன் வயலிற்கு காவலில் ஈடுபட்டுள்ளார். பரசுராமன் தனிமையில் சென்றிருப்பதை அறிந்த கூலிக்கு கொலை செய்ய அமர்த்தப்பட்ட இட்ணராஜா நிரோசன் அந்தக் கொட்டகைக்கு சென்றபேது மகனின் நண்பனான நிரோசனை கண்ட பரசுராமன் அவனுக்கும் இரவு உணவைக் கொடுத்து இருவரும் சேர்ந்து உணவு உண்டுள்ளனர். 

அதிகாலை 3.30 மணியளவில் கொலை செய்ய சென்றவன் கண் விழித்து பார்த்தபோது பரசுராமன் ஆழ்ந்த நித்திரையில் இருப்பதைக் கண்டு அங்கிருந்த கல் ஒன்றை எடுத்து அவரின் தலையில் போட்டபோது அவர் உயிரிழக்காத தையடுத்து அவன் கொண்டு சென்ற கத்தியால் கழுத்தை வெட்டியுள்ளான். அப்போதும் அவருக்கு உயிர் போகவில்லை. அதனைத் தொடர்ந்து தனது இடுப்பிலுள்ள நாடா ஒன்றை எடுத்து அவரின் கழுத்தை சுற்றி இழுத்து நெரித்ததையடுத்து அவர் உயிரிழந்துள்ளார்.பின் அங்கிருந்து தப்பி அதிகாலை 4 மணியவில் தனது நண்பனான -தந்தையை கொலை செய்ய சொன்ன சிந்துஜனிடம் கையடக்க தொலைபேசி ஊடாக நீ சொன்ன மாதிரி உனது அப்பாவை கொலை செய்துள்ளதாக தெரிவித்து வீட்டிற்குச் சென்றுள்ளான். தந்தை கொலை செய்யப்பட்டுள்ளார்.

 எனவே பேரம் பேசியவாறு பணத்தை கொடுப்பதற்காக தனது நண்பனைத் தேடி 14ம் திகதி திங்கட்கிழமை கிரான் பகுதிக்குச் சென்று சந்தித்து பேசிக்கொண்டு பின்னர் இருவரும் மோட்டர்சைக்கிளில் அங்கிருந்து வந்தாறுமூலை பகுதியிலுள்ள நகைக்கடை ஒன்றின் முன்னால் சென்று நண்பனை நிற்குமாறு தெரிவித்து நகைக்கடைக்கு சென்று அங்கு தங்க ஆபரணம் ஒன்றை ஈடுவைத்து 50 ஆயிரம் ரூபா பணத்தைப் பெற்றுக் கொண்டு அதனை கொலை செய்த நண்பனிடம் வழங்கியுள்ளான். 

பேரம் பேசிய பணத்தைப் பெற்ற நிரோசன் அங்கு ஏற்கனவே நகைக்கடை ஒன்றில் 23 ஆயிரம் ரூபாவுக்கு ஈடுவைத்த நகையை ஈட்டில் இருந்து மீட்டுக் கொண்டு அங்கிருந்து இருவரும் பிரிந்து சென்றுள்ளதாக கைது செய்யப்பட்ட இருவரிடம் பொலிசார் மேற்கொண்ட ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது இந்தக் கொலைக்கு பயன்படுத்திய கத்தி மற்றும் நாடா, கல் என்பவற்றை மீட்டுள்ளதாகவும் இந்தக் கொலை தொடர்பாக கொலை செய்யப்பட்டவரின் மகனைக் கைது செய்து விசாரணையில் கொலையாளியான கிரானைச் சேர்ந்த நித்தி என்பரை கைது செய்துள்ளதாகவும் இருவரையும் விசாரணையின் பின்னர் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுவருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கூலிக்கு ஆள்வைத்து தனது தந்தையை வெட்டிக் கொலை செய்த மகன்;மட்டக்களப்பு கரடியனாறு பகுதியில் சம்பவம் Reviewed by Author on March 18, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.