அண்மைய செய்திகள்

recent
-

புதுக்குடியிருப்பு வேலி கிராமத்தில் சௌபாக்கியா உற்பத்தி கிராம உற்பத்தி செயற்பாடுகள் ஆரம்பித்து வைப்பு!

புதுக்குடியிருப்பு வேலி கிராமத்தில் சௌபாக்கியா உற்பத்தி கிராம உற்பத்தி செயற்பாடுகள் ஆரம்பித்து வைப்பு! ஜனாதிபதியின் 'சுபீட்சத்தின் நோக்கு' கொள்கை பிரகடனத்துக்கு அமைவாக முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்துக்குட்பட்ட கைவேலி கிராமத்தில் சௌபாக்கியா உற்பத்தி கிராமம் நேற்று(16) மு.ப 11.00 மணிக்கு வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுவின் தலைவருமான காதர் மஸ்தான் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. 13 மில்லியன் நிதி ஒதுக்கீட்டில் கிராமிய உற்பத்தியை ஊக்குவிக்கும் பொருட்டு இத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. 

 இதனூடாக கைத்தறிநெசவு உற்பத்தி, சிறு ஆடைத் தொழிற்சாலை, தோற்பொருள் உற்பத்தி முதலானவை ஆரம்பித்து வைக்கப்பட்டது. இத் திட்டத்தின் மூலம் மொத்தமாக 54 பயனாளர்கள் பயனடையவுள்ளனர். மேலும் இதன்போது துறை சார்ந்து பயிற்சியினை நிறைவு செய்த உற்பத்தியாளர்களுக்கான சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டுள்ளதுடன் உற்பத்திக் கிராம வளாகத்தில் பயன்தரு மரங்களும் கலந்து கொண்ட அதிதிகளால் நாட்டி வைக்கப்பட்டன. 

 இந் நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர்( நிர்வாகம்), மேலதிக மாவட்ட அரசாங்க அதிபர்( காணி ), மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர், மாவட்ட செயலக உதவித் திட்மிடல் பணிப்பாளர், புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் மற்றும் உதவித் திட்டமிடல் பணிப்பாளர் , பிரதேச சபை வட்டார உறுப்பினர், கிராம அலுவலகர்கள், பயனாளர்கள், கிராம மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர். 

 இதனூடாக சுபீட்சமான தொலைநோக்கினைக் கொண்ட யதார்த்தமான சகல பிரஜைகளுக்கும் திட்டவட்டமான ஸ்திரத்தன்மை வளர்ச்சி கொண்ட நாட்டினை உருவாக்கும் சௌபாக்கியா உற்பத்திக் கிராம நிகழ்ச்சித்திட்டமூடாக உற்பத்திகளை ஊக்குவித்தல், தேசிய உற்பத்தியினை அதிகரித்தல், கிராமிய பொருளாதாரத்தினை மேம்படுத்தி மாற்று வருமான வழிகளினை ஏற்படுத்தல், சிறிய மற்றும் நடுத்தர மேம்பாட்டினூடாக வேலையின்மையை குறைத்தல், உள்ளுர் உற்பத்திகளை ஊக்குவித்தல் போன்றதான நோக்கங்கள் எதிர்பார்க்கப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.








































புதுக்குடியிருப்பு வேலி கிராமத்தில் சௌபாக்கியா உற்பத்தி கிராம உற்பத்தி செயற்பாடுகள் ஆரம்பித்து வைப்பு! Reviewed by Author on March 17, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.