கரைதுறைப்பற்று பிரதேச செயலர் பிரிவின் குமாரபுரம் கிராமத்தில் சௌபாக்கியா உற்பத்தி கிராமம் திறந்து வைப்பு
13 மில்லியன் நிதி ஒதுக்கீட்டில் உள்ளூர் உத்பத்தியை ஊக்குவிக்கும் பொருட்டு இத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
இதில் பால் உற்பத்தி, தேங்காய் எண்ணெய் உற்பத்தி, அரைக்கும் ஆலை, சிறுதானிய உற்பத்தி முதலானவை ஆரம்பித்து வைக்கப்பட்டது. அத்தோடு இந்த உற்பத்தி நிலையத்திற்கான 223 மீட்டர் வீதியும் புனரமைத்துக் கொடுக்கப்பட்டது.
மேலும் இதன்போது துறை சார்ந்து பயிற்சியினை நிறைவு செய்த உற்பத்தியாளர்களுக்கான சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
இத் திட்டத்தின் மூலம் மொத்தமாக 87 பயனாளர்கள் பயனடையவுள்ளனர். நேரடிப் பயனாளராக 53 பேரும் மறைமுகப்பயனாளராக 34 பேரும் பயனடைய உள்ளனர்.
இந் நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் , மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர், கரைதுறைபற்று பிரதேச செயலாளர், மாவட்ட செயலக உதவித் திட்மிடல் பணிப்பாளர், பிரதேச செயலகத்தின் உதவித் திட்டமிடல் பணிப்பாளர், பிரதேச சபை வட்டார உறுப்பினர், கிராம அலுவலகர்கள், பயனாளர்கள், கிராம மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
சுபீட்சமான தொலைநோக்கினைக் கொண்ட யதார்த்தமான சகல பிரஜைகளுக்கும் திட்டவட்டமான ஸ்திரத்தன்மை வளர்ச்சி கொண்ட நாட்டினை உருவாக்கும் சௌபாக்கியா உற்பத்திக் கிராம நிகழ்ச்சித்திட்டமூடாக உற்பத்திகளை ஊக்குவித்தல், தேசிய உற்பத்தியினை அதிகரித்தல், கிராமிய பொருளாதாரத்தினை மேம்படுத்தி மாற்று வருமான வழிகளினை ஏற்படுத்தல், சிறிய மற்றும் நடுத்தர மேம்பாட்டினூடாக வேலையின்மையை குறைத்தல், உள்ளுர் உற்பத்திகளை ஊக்குவித்தல் போன்றதான நோக்கங்கள் எதிர்பார்க்கப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.
கரைதுறைப்பற்று பிரதேச செயலர் பிரிவின் குமாரபுரம் கிராமத்தில் சௌபாக்கியா உற்பத்தி கிராமம் திறந்து வைப்பு
Reviewed by Author
on
March 17, 2022
Rating:
No comments:
Post a Comment