மன்னாரில் நெல் காயப்போடும் தளங்கள் இல்லாததால் வீதிகளைப் பயன்படுத்தும் அவல நிலையில் விவசாயிகள்.
இதனால் செலவுகள் பல மடங்கு அதிகரிக்கிறது. அதில் உழவு இயந்திர வசதி இல்லாதவர்கள் நிலை பரிதாபத்துக்குரியது.பல நூறு ஏக்கர் வயல் நிலங்களை உள்ளடக்கி பொதுவான தளங்களை அமைத்துக் கொடுப்பது விவசாயத்திற்கும் விவசாயிகளுக்கும் மிகவும் பயன்பெரும்.
நானாட்டான் பிரதேசத்தில் உமநகரி கீழ்ப் பகுதியில் சிறுவெளி பிரதேசங்களிலும் மேட்டு நிலங்கள் காணப்படுகிறது. அவ்வாறான மேட்டு நிலங்களை அடையாளம் கண்டு நெல் காயப்போடும் தளங்களை அமைப்பதற்கு விவசாய அடைப்புக்கள் முன்வர வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.
மேலும் இவ்வாறு வீதிகளில் நெல் காயப் போடுவதால் போக்குவரத்திற்கு இடையூறுகள் ஏற்படுவதோடு விபத்துக்கள் ஏற்படவும் வாய்ப்புகள் உள்ளதாக மன்னார் மாவட்ட விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
மன்னாரில் நெல் காயப்போடும் தளங்கள் இல்லாததால் வீதிகளைப் பயன்படுத்தும் அவல நிலையில் விவசாயிகள்.
Reviewed by Author
on
March 17, 2022
Rating:
No comments:
Post a Comment