சிறுமி ஆயிஷாவிற்கு நீதி கோரி மன்னாரில் நாளை போராட்டம்
மன்னார் பஜார் பகுதியில் நாளை காலை 10 மணிக்கு குறித்த போராட்டம் இடம் பெற உள்ளது.
வடக்கு -கிழக்கு மாகாணங்களில் உள்ள பெண்கள் வலையமைப்பினர், சமூக ஆர்வலர் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் ஒன்றினைந்து தொடர்ச்சியாக நாட்டில் இடம் பெறும் சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை தடுக்கவும் அவ்வாறான செயற்பாடுகளால் பாதிக்கப்படும் பெண்கள் சிறுவர்களுக்கு விரைவில் நீதி நிலை நாட்ட படவேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி 8 மாவட்டங்களில் நாளை போராட்டம் இடம்பெறவுள்ளது
எனவே பொதுமக்கள் குறித்த போராட்டத்தில் கலந்து கொண்டு சிறுவர்கள் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை இல்லாதொழிக்க ஒன்றிணையுமாறு பெண்கள் ஒன்றியம் கோரிக்கை விடுத்துள்ளனர்
வடகிழக்குப் பெண்கள் ஒன்றியம்.
சிறுமி ஆயிஷாவிற்கு நீதி கோரி மன்னாரில் நாளை போராட்டம்
Reviewed by Author
on
May 30, 2022
Rating:

No comments:
Post a Comment