மன்னார் பேசாலை கடற்பரப்பில் தங்கத்துடன் 03 சந்தேக நபர்கள் கடற்படையினரால் கைது-வலம்புரி சங்கும் மீட்பு.
இதன் போது பேசாலை கடற்கரையில் இருந்து சந்தேகத்திற்கிடமான வகையில் பயணித்த படகு ஒன்றை பரிசோதித்தனர்.
-இதன் போது குறித்த படகில் இருந்து 470 கிராம் தங்கம் மற்றும் வலம்புரிச் சங்கு ஆகியவற்றை கடற்படையினர் மீட்டனர்.
குறித்த சம்பவத்துடன் ஈடுபட்ட 03 சந்தேக நபர்களையும்,அந்த பொருட்களை கடத்த பயன்படுத்திய டிங்கி படகையும் கடற்படையினர் கைது செய்தனர்.
இதற்கிடையில் இந்த நடவடிக்கையில் கைப்பற்றப்பட்ட தங்கத்தின் சந்தை மதிப்பு ரூ. 09 மில்லியன் என கடற்படையினர் தெரிவித்தனர்.
கடற்படையினரால் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 24 முதல் 39 வயதுக்குட்பட்ட புத்தளம் மற்றும் பேசாலை பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.
குறித்த சந்தேக நபர்கள், தங்கம், சங்கு மற்றும் படகுகளுடன் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பாணத்தில் உள்ள சுங்க அலுவலகத்தில் கடற்படையினரால் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
மன்னார் பேசாலை கடற்பரப்பில் தங்கத்துடன் 03 சந்தேக நபர்கள் கடற்படையினரால் கைது-வலம்புரி சங்கும் மீட்பு.
Reviewed by Author
on
July 26, 2022
Rating:

No comments:
Post a Comment