அண்மைய செய்திகள்

recent
-

மோட்டார் சைக்கிள் கொள்கலன் மீது மோதியதில் 2 இளைஞர்கள் பலி

கொடதெனிய பல்லேகம வீதியின் மல்லவலன சந்தியில் மோட்டார் சைக்கிள் ஒன்று கொள்கலன் பாரவூர்தியுடன் மோதியதில் நேற்று (22) பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் இருபது வயதுடைய இளைஞர்கள் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கொடதெனிய டொரோவ்வே பகுதியைச் சேர்ந்த ஏ. இருபது வயதுடைய ரணில் என்ற இளைஞனும், கிரியுல்ல பகுதியைச் சேர்ந்த அதே வயதுடைய றியாஸ் என்ற இளைஞனும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 கிரிஉல்ல குருநாகல் வீதியின் மல்லவலன சந்தியில் உயிரிழந்த இரு இளைஞர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள் கொள்கலனுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்த இருவரும் விளையாட்டு போட்டிக்கு சென்றிருந்த போதே இந்த விபத்தில் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உயிரிழந்த இருவரின் பிரேத பரிசோதனை நேற்று (22) பிற்பகல் தம்பதெனிய ஆதார வைத்தியசாலையில் நடைபெறவிருந்தது.

மோட்டார் சைக்கிள் கொள்கலன் மீது மோதியதில் 2 இளைஞர்கள் பலி Reviewed by Author on August 23, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.