தனியார் பஸ் சேவைகள் இன்று வழமைப்போல் இயங்கும்
பஸ்களுக்கான எரிபொருள் ஒதுக்கீடு தொடர்பாக நேற்று அதிகாரிகளிடமிருந்து சாதகமான பதில் கிடைத்ததாகவும் அவர் தெரிவித்தார்.
எனவே, இன்று பஸ்கள் ஓரளவுக்கு இயங்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
தேசிய எரிபொருள் அனுமதிச் சீட்டு QR குறியீட்டின் ஊடாக வெளியிடப்படும் எரிபொருள் ஒரு வார கால பாவனைக்கு போதுமானதாக இல்லை எனக் கூறி பல தனியார் பஸ் தொழிற்சங்கங்கள் நேற்றைய தினம் சேவையில் இருந்து விலகிக் கொண்டன.
பஸ்கள் இல்லாததால் பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். இதேவேளை நேற்று மாலை போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
தனியார் பஸ் சேவைகள் இன்று வழமைப்போல் இயங்கும்
Reviewed by Author
on
August 06, 2022
Rating:

No comments:
Post a Comment