கௌரியம்மை உடனாய திருக்கேதீச்சர பெருமான் திருக்கோயிலில் இடம்பெறவுள்ள மண்டலாபிஷேக பூர்த்தி விழா
எதிர்வரும் 23.08.2022 செவ்வாய்க்கிழமை மண்டலாபிஷேக பூர்த்தி விழாவானது வெகுவிமர்சையாக நடைபெறவுள்ளது .காலை 8.30 மணிக்கு சங்காபிடேகங்களுடனும் ஸ்நபனடேகங்களுடனும் ஆரம்பமாகி மதியம் உச்சிக்கால பூசையுடன் நிறைவு பெறும்.
மேலும் மாலை சாயரட்சை பூசையை தொடர்ந்து வசந்த மண்டப பூசை இடம்பெற்று பஞ்ச பூர்த்திகள் உள்வீதி,வெளிவீதி வலம் வரும் நிகழ்வுகளும் இடம்பெறும்.இந் நிகழ்வுகளில் கலந்து கொண்டு திருக்கேதீச்சர பெருமானின் திருவருளை பெற்றுய்யும் வண்ணம் அடியார்களை அழைக்கின்றனர்.
கௌரியம்மை உடனாய திருக்கேதீச்சர பெருமான் திருக்கோயிலில் இடம்பெறவுள்ள மண்டலாபிஷேக பூர்த்தி விழா
Reviewed by Author
on
August 20, 2022
Rating:

No comments:
Post a Comment