அண்மைய செய்திகள்

recent
-

பேருந்தில் பயணித்த மூதாட்டி உயிரிழப்பு!

யாழ்ப்பாணத்தில் இருந்து பேருந்தில் கொடிகாம சந்தைக்கு தேங்காய் கொள்வனவு செய்ய சென்ற மூதாட்டியொருவர் திடீர் நெஞ்சு வலி காரணமாக உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் குருநகர் பகுதியை சேர்ந்த செபநாயகம் செல்வமலர் எனும் 64 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.

 குறித்த மூதாட்டி நேற்று செவ்வாய்க்கிழமை பேருந்தில் பயணித்துக்கொண்டிருந்த வேளை, திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டு பேருந்துக்குள் மயங்கி சரிந்துள்ளார். அதனை அடுத்து சாரதி பேருந்தில் மூதாட்டியை சாவகச்சேரி வைத்திய சாலைக்கு கொண்டு சென்ற போதிலும், மூதாட்டி ஏற்கனவே உயிரிழந்து விட்டார் என வைத்தியர்கள் அறிக்கையிட்டனர். அதையடுத்து மூதாட்டியின் சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக சாவகச்சேரி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.


பேருந்தில் பயணித்த மூதாட்டி உயிரிழப்பு! Reviewed by Author on August 24, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.