அண்மைய செய்திகள்

recent
-

கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட தாயும் மகளும்

பதுளை, கனல்பின்வத்த, ஹிகுருகமுவ பிரதேசத்தில் பெண் ஒருவரையும் அவரது மகளையும் கூரிய ஆயுதங்களால் தாக்கி கொலை செய்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. குறித்த பெண்ணும் அவரது 2 மகள்களும் பிரதேசத்தில் உள்ள தோட்ட வீடு ஒன்றில் வசித்து வந்ததாகவும், அவர்கள் இன்று (10) காலை தாக்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். 

 குறித்த சம்பவத்தில் 83 வயதான தாயும் 55 வயதுடைய மகளும் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். வெட்டுக்காயங்களுக்கு உள்ளான 62 வயதுடைய மகள் ஆபத்தான நிலையில், பதுளை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். கொலைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை எனவும், சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்ய பதுளை பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது


.
கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட தாயும் மகளும் Reviewed by Author on September 10, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.