நடத்துனர் இல்லாமல் இயங்கும் அதிநவீன பஸ் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது
கையடக்கத் தொலைபேசி செயலி மூலம் நடைமுறைப்படுத்தப்படும் இந்த பொதுப்போக்குவரத்து சேவை தொடர்பில் இந்த கலந்துரையாடலின் போது அறிமுகம் செய்யப்பட்டது.
கொழும்பு கோட்டை, கொம்பனித்தெரு, கொள்ளுப்பிட்டி, பம்பலப்பிட்டி, பொரளை, நகர மண்டபம் உட்பட கொழும்பு நகரின் பெரும்பாலான பிரதான நிலையங்களை உள்ளடக்கியதாக இந்த திட்டம் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த பஸ்ஸில் எவ்வளவு தூரம் பயணித்தாலும் 200 ரூபா மாத்திரமே நிர்ணயிக்கப்பட்ட கட்டணமாக அறவிடப்படவுள்ளது.
கையடக்க தொலைபேசியில் உள்ள செயலி மூலம் கட்டணம் செலுத்தப்படுவதால், இந்த பஸ்களுக்கு நடத்துனர் தேவையில்லை என்பது மற்றொரு விசேட அம்சமாகும்
நடத்துனர் இல்லாமல் இயங்கும் அதிநவீன பஸ் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது
Reviewed by Author
on
October 30, 2022
Rating:

No comments:
Post a Comment