அண்மைய செய்திகள்

recent
-

விபத்தில் பொலிஸ் அதிகாரி பலி

பொன்னறுவை வாழைச்சேனை பிரதான வீதியிலுள்ள புனானை பகுதியில் பேருந்து ஒன்று மோட்டார் சைக்கிள் ஒன்றை மோதியதில் வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று (24) இரவு இடம்பெற்றுள்ளதாகவும் இவ்விபத்து சம்பவம் தொடர்பில் பேருந்து சாரதியை கைது செய்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர். மாத்தளையைச் சேர்ந்த 35 வயதுடைய அசங்க என்ற பொலிஸ் கான்ஸ்டபிளே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 

 வாழைச்சேனையில் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிவரும் குறித்த நபர் விடுமுறையில் வீடு சென்று கடமைக்காக சம்பவதினமான நேற்று மாலை 6 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வாழைச்சேனை நோக்கி பயணித்துக்கு கொண்டிருந்தபோது இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இதனையடுத்து உயிரிழந்தவரை உடனடியாக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

விபத்தில் பொலிஸ் அதிகாரி பலி Reviewed by Author on November 25, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.