அரசுக்கு எதிராக இன்று ஆர்ப்பாட்டம்; கொழும்பில் குவிக்கப்பட்ட முப்படைகள்!
போராட்டக்காரர்கள் மீதான அடக்குமுறைகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும், பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டுத் தடுத்துவைக்கப்பட்டுள்ள அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே உள்ளிட்ட மூவரும் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும், உள்ளூராட்சி சபைத் தேர்தல் உடனடியாக நடத்தப்பட வேண்டும் எனப் பல்வேறு கோஷங்கள் இதன்போது எழுப்பப்படவுள்ளன.
மருதானை சந்தியிலிருந்து கோட்டை ரயில் நிலையம் வரை பேரணியாக வரும் போராட்டக்காரர்கள் ஜனாதிபதி செயலகம், ஜனாதிபதி மாளிகையை நோக்கிப் படையெடுத்தால் அதைத் தடுத்து நிறுத்தும் வகையில் பாதுகாப்புத் தரப்பினர் முன்னாயத்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
அரசுக்கு எதிராக இன்று ஆர்ப்பாட்டம்; கொழும்பில் குவிக்கப்பட்ட முப்படைகள்!
Reviewed by Author
on
November 02, 2022
Rating:

No comments:
Post a Comment