அண்மைய செய்திகள்

recent
-

“இதுதான் என்னுடைய கடைசி உலகக்கோப்பை போட்டி”- ஓய்வை அறிவித்த மெஸ்ஸி!

நட்சத்திர வீரரான மெஸ்ஸி 2022 ஆம் ஆண்டு உலகக்கோப்பையுடன் ஓய்வுபெறுவதாக அறிவித்திருக்கிறார். கட்டாரில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை கால்பந்து தொடரின் அரையிறுதிப் போட்டியில் குரோஷியாவை தோற்கடித்தது அர்ஜெண்டினா அணி. அல்வரெஸின் பிரேஸ் மற்றும் லியோனல் மெஸ்ஸியின் கோலினால் குரோஷியாவை 3-0 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினா வீழ்த்தி 6 வது முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றுள்ளது. போட்டியின் வெற்றிக்கு பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய நட்சத்திர வீரரான மெஸ்ஸி 2022 ஆம் ஆண்டு உலகக்கோப்பையுடன் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 

இது தொடர்பாக பேசிய, “மெஸ்ஸி இறுதிப் போட்டிக்கு மீண்டும் ஒரு முறை தகுதி பெற்றது மகிழ்ச்சியாக உள்ளது. எனது உலகக்கோப்பை பயணம் முடிவுக்கு வந்துவிட்டதாகவே கருதுகிறேன். அடுத்த உலககோப்பை போட்டிக்கு இன்னும் 4 வருடங்கள் உள்ளது. அதில் பங்குபெற்றாலும் சிறப்பாக விளையாடி அணியை பைனல் வரை கொண்டு செல்வேனா என்று தெரியாது. வரும் 18ஆம்திகதி நடைபெறும் இறுதிப் போட்டியே என்னுடைய கடைசி போட்டியாக இருக்கும். அதில் உலககோப்பையை வென்று தருவேன் என நம்புகிறேன் என்று தெரிவித்துள்ளார். தன்னுடைய 35 வயதில் , ஒரு முறையாவது FIFA உலககோப்பையை வெல்ல வேண்டும் என்ற நோக்கில் போட்டியில் மெஸ்ஸி விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

.
“இதுதான் என்னுடைய கடைசி உலகக்கோப்பை போட்டி”- ஓய்வை அறிவித்த மெஸ்ஸி! Reviewed by Author on December 14, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.