கட்டுப்பணத்தினை செலுத்துவதற்கான கால எல்லை இன்றுடன் நிறைவடைகின்றது!
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக, அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்கள், கட்டுப்பணம் செலுத்துவதற்கான கால எல்லை இன்று(வெள்ளிக்கிழமை) நண்பகல் 12 மணியுடன் நிறைவடையவுள்ளது. அத்துடன், நாளை நண்பகல் 12 மணிவரை வேட்புமனுக்களை சமர்ப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
வேட்புமனு கோரும் இறுதி நாளான்று வாக்களிப்பு இடம்பெறும் தினம் தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
எனவே உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடைபெறவுள்ள திகதி குறித்த அறிவிப்பு நாளைய தினம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
கட்டுப்பணத்தினை செலுத்துவதற்கான கால எல்லை இன்றுடன் நிறைவடைகின்றது!
Reviewed by Author
on
January 20, 2023
Rating:

No comments:
Post a Comment