பாராளுமன்றத்தை வீடியோ பதிவு செய்த இரு சந்தேக நபர்கள் கைது
பாராளுமன்றத்தை வீடியோ படம் எடுத்ததன் நோக்கம் இதுவரை வெளியாகவில்லை என்றும், இது தொடர்பாக சந்தேக நபர்கள் இருவரிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் தலங்கம பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இந்த இருவராலும் பிடிக்கப்பட்ட காட்சிகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், அதனை ஆராய்ந்து வருவதாகவும் தெரிவித்த அதிகாரி, சம்பவம் தொடர்பில் பாராளுமன்ற தலைவர்களுக்கும் அறிவித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் தலங்கம பொலிஸ் அதிகாரிகள் குழு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பாராளுமன்றத்தை வீடியோ பதிவு செய்த இரு சந்தேக நபர்கள் கைது
Reviewed by Author
on
January 29, 2023
Rating:

No comments:
Post a Comment