அண்மைய செய்திகள்

recent
-

60 அடி ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 7 வயது சிறுவன்: 24 மணி நேரத்திற்குப் பிறகு பிணமாக மீட்பு

இந்தியாவின் மத்தியப்பிரதேச மாநிலத்தில் 60 அடி ஆழமுள்ள ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 7 வயது சிறுவன் 24 மணி நேரத்திற்குப் பிறகு பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலம் விதிஷா மாவட்டத்தில் உள்ள கெர்கேடி பத்தர் கிராமத்தைச் சேர்ந்த லோகேஷ் அஹிர்வார்(7) என்ற சிறுவன், நேற்று தெருவில் விளையாடிக் கொண்டிருந்த போது அங்கிருந்த ஆழ்துளை கிணற்றில் தவறிவிழுந்தார். இதையறிந்த அவனது குடும்பத்தினர் உடனடியாக தீயணைப்புத்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த தேசிய பேரிடர் மீட்புப் படை மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படை வீரர்கள் மீட்பு நடவடிக்கையில் இறங்கினர். 

60 அடி ஆழமுள்ள ஆழ்துளைக் கிணற்றில் 43-வது அடியில் சிறுவன் லோகோஷ் சிக்கியிருந்தது தெரிய வந்தது. இதையடுத்து சிறுவனை மீட்பதற்கான தொடர் நடவடிக்கையில் மீட்புக்குழுவினர் ஈடுபட்டனர். சுவாசிக்க காற்றில் இல்லாமல் தவித்த சிறுவனுக்காக ஆழ்துளை கிணற்றுக்குள் குழாய் மூலம் செயற்கை சுவாசம் வழங்கப்பட்டது. இந்த நிலையில், ஜேசிபி இயந்திரம் மூலம் குழி தோண்டி 24 மணி நேரத்திற்குப் பிறகு மீட்கப்பட்ட சி றுவன் 14 கி.மீ தொலைவில் உள்ள லேட்ரி நகரத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். ஆனால், ஏற்கெனவே சிறுவன் லோகோஷ் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனால் அக்கிராம மக்கள் சோகத்தில் ஆழ்ந்தனர்.

60 அடி ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 7 வயது சிறுவன்: 24 மணி நேரத்திற்குப் பிறகு பிணமாக மீட்பு Reviewed by Author on March 15, 2023 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.