அண்மைய செய்திகள்

recent
-

காணி சுவீகரிப்புக்கு எதிராக பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம்

 முல்லைத்தீவு - அக்கரைவெளி காணி சுவீகரிப்புக்கு எதிராக யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.


யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பிரதான நுழைவாயிலுக்கு முன்பாக நேற்று (31) மாலை 4 மணி அளவில் ஒன்று கூடிய பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் குறித்த போராட்டம் இடம்பெற்றது.

இதன்போது மகாவலி அபிவிருத்தித் அதிகார சபையே நிலங்களை அபகரிக்காதே, எமது நிலம் எமக்கு வேண்டும் என பல்வேறு கோஷங்கள் எழுப்பப்பட்டன. என்பது குறிப்பிடத்தக்கது.


காணி சுவீகரிப்புக்கு எதிராக பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் Reviewed by Author on August 01, 2023 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.