யாழ்ப்பாணத்தில் இந்திய சுதந்திர தின நிகழ்வுகள்
இந்தியாவின் 78ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் இன்றைய தினம் வியாழக்கிழமை (15) காலை யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தில் நடைபெற்றது.
இதன்போது யாழ்ப்பாணத்துக்கான இந்திய துணைத் தூதுவர் சாய் முரளி அணிவகுப்பு மரியாதையுடன் அழைத்து வரப்பட்டு இந்திய தேசியக்கொடியை ஏற்றி வைத்தார்.
தொடர்ந்து, இந்திய ஜனாதிபதியின் உரையை துணைத்தூதுவர் சாய் முரளி வாசித்தார்.
இந்நிகழ்வில் துணைத்தூதரக அதிகாரிகள், பணியாளர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
யாழ்ப்பாணத்தில் இந்திய சுதந்திர தின நிகழ்வுகள்
Reviewed by Author
on
August 15, 2024
Rating:

No comments:
Post a Comment