மன்னார் தமிழ் சங்கத்தின் ஏற்பாட்டில் அடம்பனில் இடம் பெற உள்ள பொங்கல் விழா பண்பாட்டியல் நிகழ்வு.
மன்னார் தமிழ் சங்கத்தின் ஏற்பாட்டில்,தமிழர் திருநாளாம் தைத்திருநாள் பொங்கல் விழா பண்பாட்டியல் நிகழ்வு எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை(19) காலை 9 மணிக்கு மன்னார் அடம்பன் மத்திய மகா வித்தியாலயத்தில் இடம்பெற உள்ளது.
மன்னார் தமிழ் சங்கத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன் தலைமையில் இடம் பெற உள்ள குறித்த நிகழ்விற்கு முதன்மை விருந்தினராக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் மற்றும் சிறப்பு விருந்தினராக அடம்பன் மத்திய மகா வித்தியாலய பாடசாலை அதிபர் மை.கிறிஸ்ரியான் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர்.
தைத்திருநாள் பொங்கல் விழா பண்பாட்டியல் நிகழ்வின் ஓர் அங்கமாக வரவேற்பு நடனம், கிராமிய நடனம், கவிதை,பேச்சு,குழுப்பாடல்,நவீனம் குறியீட்டு நாடகம்,கருத்துக்களம் ஆகிய நிகழ்வுகளும் இடம்பெற உள்ளது.

No comments:
Post a Comment