அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் துப்பாக்கிச் சூடு - சந்தேக நபர்கள் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில்!

 மன்னார் நீதவான் நீதிமன்றத்துக்கு முன்பாக இருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 5 சந்தேக நபர்களும் எதிர்வரும் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். 

 

கடந்த 16 ஆம் திகதி மன்னார் நீதவான் நீதிமன்றத்திற்கு முன்பாகஉந்துருளியில் பிரவேசித்த இருவர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். 

 

இந்த துப்பாக்கிச் சூட்டில் 42 மற்றும் 61 வயதுடைய இருவர் உயிரிழந்ததுடன், நால்வர் காயமடைந்தனர். 

 

இந்தநிலையில் குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய மற்றொரு சந்தேக நபர் நேற்று கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.




மன்னார் துப்பாக்கிச் சூடு - சந்தேக நபர்கள் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில்! Reviewed by Author on January 24, 2025 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.