வவுனியாவில் 28 வயது குடும்பஸ்தர் வெட்டிக் கொலை - சந்தேகத்தின் பேரில் மைத்துனர் கைது
வவுனியா, சுந்தரபுரத்தில் நேற்று (23) இரவு ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளதாக ஈச்சங்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.
சுந்தரபுரம் பகுதியில் வசித்து வந்த 28 வயதுடைய சுந்தரலிங்கம் சுகந்தன் என்ற ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
மரணமடைந்த குறித்த நபர் கடந்த தீபாவளி தினத்தன்று தனது மாமியாரை துப்பாக்கியால் சுட்டு காயப்படுத்திய வழக்கில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு வழக்கு விசாரணை இடம்பெற்று வரும் நிலையில் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில், மோட்டார் சைக்கிளில் இரவு 11:30 மணியளவில் தனது வீட்டுக்கு அருகில் சென்று கொண்டிருந்தபோதே கூரிய ஆயுதத்தால் இவர் கொலை செய்யப்பட்டு இருப்பதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் இவரது மைத்துனர் ஈச்சங்குளம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இக்கொலைச் சம்பவம் தொடர்பில் ஈச்சங்குளம் பொலிஸார் தடவியல் பொலிஸாரின் உதவியுடன் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்
Reviewed by Author
on
January 24, 2025
Rating:





No comments:
Post a Comment