அண்மைய செய்திகள்

recent
-

காட்டு யானைகள் சஞ்சாரம்- சம்மாந்துறை பகுதி

 வேளாண்மை அறுவடையின் பின்னர் யானை கூட்டம்    புதிதாக முளைக்கும் புல் இனங்களை உண்பதற்காக  நாடி வருகின்றன.


அம்பாறை மாவட்டத்தில்   திடீரென சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வளத்தாப்பிட்டி வில்லுக்குளப்    பகுதிகளை ஊடறுத்து    யானைகள்   இவ்வாறு காலை முதல் மாலை  வருகை தந்துள்ளன.


இதன் போது  குறித்த யானைகள் அங்குள்ள புதிய புல் இனங்களை உண்ணுவதோடு கூட்டத்தில் உள்ள யானை குட்டிகள் விளையாடுவதையும் காண முடிந்தது.


இன்று சுமார் பெரிய யானைகள் மற்றும் குட்டிகள் என 100க்கும் அதிகமான  யானைகள் அப்பகுதியில்  உள்ள அறுவடை செய்யப்பட்ட வயல் நிலங்களை நோக்கி   வருகை தந்திருந்தன.



தினமும்  இப்பகுதிக்கு வரும்  யானை கூட்டத்தை மக்கள் பார்வையிட்டு வருகின்றனர். இவ்வாறு வயல்வெளிகளை  நோக்கி வருகை தந்துள்ள யானைகள் ஊருக்குள் பிரவேசிக்க முடியாத வகையில் பார்வையாளர்களாக உள்ள மக்கள் சத்தங்களை எழுப்பிய வண்ணம் உள்ளனர்.


மேலும்   இப் பிரதேசத்தில் அண்மையில் வேளாண்மை அறுவடை மேற்கொள்ளப்பட்ட நிலையில்  தீ வைக்கப்படுவதனாலும் அங்கு  கொட்டப்படும்  குப்பைகளை தினந்தோறும் 130 க்கும் மேற்பட்ட யானைகள் உண்ணுவதற்கு  வருகை தருவதுடன் அருகில் உள்ள பொது மக்களின் உடமைகளுக்கும் சேதம் விளைவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.




 

காட்டு யானைகள் சஞ்சாரம்- சம்மாந்துறை பகுதி Reviewed by Author on February 19, 2025 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.