அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் மாவீரர் பெற்றோர்கள் மதிப்பளிப்பு .

 மன்னார் மாவட்டத்தில்  உள்ள மாவீரர்களின்  பெற்றோர்கள், உரித் துடையோர் ஆகியோரை ஒன்றிணைத்து அவர்களை கௌரவிக்கும் முகமாக மன்னார் இரணை இலுப்பைகுளம்,முள்ளிக்குளம் பண்டிவிரிச்சான் பிரதேசத்தை சேர்ந்த 95 மாவீரர்களின் பெற்றோர் இன்று(13) கெளரவிக்கப்பட்டனர்.


 மன்னார் மாவீரர் பெற்றோர் மதிப்பளிப்பு குழுவின் ஏற்பாட்டில் மாவீரர்களின் உறவுகளுடன் 150 மேற்பட்டோர் பங்குபற்றலுடன் மாவீரர் பெற்றோர் மதிப்பளிப்பு நிகழ்வு உணர்வு பூர்வமாக நடைபெற்றுள்ளது.


இம்மதிப்பளிப்பில் அருட்தந்தையர்கள், முன்னாள் போராளிகள் மற்றும் மாவீரர் பெற்றோர்கள்  ,பொதுமக்கள் என பலர் பங்குபற்றியிருந்தனர்.


முதலில் மாவீரர் பெற்றோர்களால் பொதுச்சுடர் ஏற்றி வைக்கப்பட்டு ,மலர்மாலை அணிவிக்கப்பட்டு பின் அகவணக்கம் செலுத்தப்பட்டு நிகழ்வு ஆரம்பமானது.


குறித்த நிகழ்வில் மாவீரர்  தியாகங்கள் பற்றிய பேச்சுக்கள் நடைபெற்றதுடன் மாவீரர்களின் பெற்றோர் மற்றும் உரித்துடையோருக்கு கௌரவிப்பு வழங்கப்பட்டதுடன்    நினைவாக மரக்கன்றுகள்  மாவீரர் பெற்றோர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.












மன்னாரில் மாவீரர் பெற்றோர்கள் மதிப்பளிப்பு . Reviewed by Vijithan on November 13, 2025 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.