ஐந்தாவது தேசிய வாய்வழி சுகாதார கணக்கெடுப்பு இன்று முதல்
நாட்டின் 5ஆவது தேசிய வாய்வழி சுகாதார கணக்கெடுப்பு இன்று (10) முதல் ஆரம்பமாவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்தக் கணக்கெடுப்பு எதிர்வரும் நவம்பர் மாத இறுதி வரை முன்னெடுக்கப்படும் என அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
நாட்டின் அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கிய வகையில் இந்தக் கணக்கெடுப்பு நடத்தப்படவுள்ளதுடன், இதன்போது தெரிவுசெய்யப்பட்ட பாடசாலைகள் மற்றும் வீடுகளை மையமாகக் கொண்டு தரவுகள் சேகரிக்கப்படவுள்ளன.
இதேவேளை, தேசிய வாய்வழி சுகாதார கணக்கெடுப்பை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்காக பாடசாலைகள் மற்றும் வீடுகளுக்கு வருகை தரும் வைத்தியர்களுக்குத் தேவையான ஒத்துழைப்பை வழங்குமாறு இக்கணக்கெடுப்பின் பிரதான ஆய்வாளர் விசேட வைத்திய நிபுணர் நிலந்த ரத்நாயக்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஐந்தாவது தேசிய வாய்வழி சுகாதார கணக்கெடுப்பு இன்று முதல்
Reviewed by Vijithan
on
March 10, 2026
Rating:
Reviewed by Vijithan
on
March 10, 2026
Rating:
.jpg)

No comments:
Post a Comment