கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்ட நபர்
கை,கால்கள் கட்டப்பட்ட நிலையில் படுகொலை செய்யப்பட்ட நபரொருவரின் சடலம் இன்று (03) காலை பாணந்துறை - கொழும்பு பழைய வீதியில் பாணந்துறை தெற்கு பொலிஸாரால் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு உயிரிழந்தவர் பாணந்துறை வடக்கு, ஞானசேன மாவத்தையில் வசித்து வந்த 37 வயதுடைய ஒருவர் எனத் தெரியவந்துள்ளது.
இந்தப் படுகொலை எவ்வாறு இடம்பெற்றது என்பது குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகாத நிலையில், சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்ட நபர்
Reviewed by Vijithan
on
March 03, 2026
Rating:
Reviewed by Vijithan
on
March 03, 2026
Rating:


No comments:
Post a Comment