அண்மைய செய்திகள்

recent
-

20 ஆண்டுகளாக கதவு திறக்கவும் இல்லை … காணமல் போன என் பிள்ளைகள் திரும்பி வரவும்இல்லை!”

 சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தில், மூன்று பிள்ளைகளின் புகைப்படத்தை நெஞ்சோடு அணைத்தபடி பதிலுக்காக காத்திருக்கும் ஒரு தாயின் கண்ணீர் கதை


“அன்று செய்தி பார்த்துக் கொண்டிருந்தார்கள்… துப்பாக்கிகளுடன் வந்தவர்கள் அழைத்துச் சென்றார்கள். அதன் பிறகு என் பிள்ளைகளை நான் பார்க்கவே இல்லை…”


20 ஆண்டுகள் கடந்துவிட்டன.

ஆனால் அந்தத் தாயின் காத்திருப்பு மட்டும் இன்னும் முடிவடையவில்லை.


தனது மூன்று பிள்ளைகளின் புகைப்படங்களை கையில் ஏந்தியபடி, “என் பிள்ளைகள் எங்கே? அவர்களுக்கு என்ன நடந்தது?” என்ற கேள்வியுடன் இன்றும் பதிலைத் தேடி வருகிறார் அந்தத் தாய்.


தனது பிள்ளைகளை EPDP மற்றும் இராணுவத்தினரே அழைத்துச் சென்றதாக அவர் குற்றஞ்சாட்டுகிறார். எனினும், அவர்களுக்கு என்ன நடந்தது என்பது தொடர்பில் இதுவரை உறுதியான பதில் கிடைக்கவில்லை என அவர் தெரிவிக்கிறார்.


ஆண்டுகள் கடந்தாலும், ஒரு தாயின் நம்பிக்கை மட்டும் மங்கவில்லை.

ஒருநாள் தனது பிள்ளைகள் பற்றிய உண்மை வெளிவரும் என்ற எதிர்பார்ப்புடன் அவர் தொடர்ந்து காத்திருக்கிறார்.


அவரது கைகளில் இருக்கும் அந்த மூன்று இளைஞர்களின் புகைப்படங்கள், ஒரு குடும்பத்தின் நினைவுகள் மட்டுமல்ல; பதில் கிடைக்காமல் காத்திருக்கும் எண்ணற்ற குடும்பங்களின் வலியையும் பிரதிபலிக்கின்றன.


“உண்மை வெளிவரும் வரை எங்கள் தேடல் நிற்காது…”


இது ஒரு தாயின் குரல் மட்டுமல்ல.

பல ஆண்டுகளாக பதிலை எதிர்பார்த்து காத்திருக்கும் குடும்பங்களின் மௌனக் குரலும் கூட.





20 ஆண்டுகளாக கதவு திறக்கவும் இல்லை … காணமல் போன என் பிள்ளைகள் திரும்பி வரவும்இல்லை!” Reviewed by Vijithan on August 30, 2026 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.